» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் வாக்குப்பதிவு : கனிமொழி ஆய்வு!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 12:39:44 PM (IST)
தூத்துக்குடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச் சாவடிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி வாக்குச்சாவடியை ஆய்வு செய்தார். முன்னதாக அவர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
m.sundaramApr 19, 2024 - 05:52:22 PM | Posted IP 162.1*****
Is it permissible? How the MP is allowed to oversee the election process in side the poling booth? Disciplinary action has to be taken against the polling officer for this violation of election code of conduct procedure. That will never be taken
அரசியல்வாதிகளுக்குApr 19, 2024 - 01:06:25 PM | Posted IP 162.1*****
அது என்ன ஆய்வு ??
ஆமாApr 20, 2024 - 06:23:22 PM | Posted IP 172.7*****