» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: 29 வழக்குகள் பைசல்
திங்கள் 8, ஜூலை 2024 8:04:47 AM (IST)

தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 29 வழக்குகள் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் தலைமை தாங்கினார். தென்காசி முதன்மை சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் கிறிஸ்டல் பபிதா முன்னிலை வகித்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தென்காசி, இலஞ்சி, வீராணம், கடையநல்லூர், பாவூர்சத்திரம், மற்றும் சுரண்டை வங்கி கிளைகளில் இருந்து வழக்குத் தொடரப்பட்ட 29 வழக்குகள் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. இவற்றில் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. மற்ற 28 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் மட்டும் செய்யப்பட்ட வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)
