» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: 29 வழக்குகள் பைசல்
திங்கள் 8, ஜூலை 2024 8:04:47 AM (IST)

தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 29 வழக்குகள் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் தலைமை தாங்கினார். தென்காசி முதன்மை சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் கிறிஸ்டல் பபிதா முன்னிலை வகித்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தென்காசி, இலஞ்சி, வீராணம், கடையநல்லூர், பாவூர்சத்திரம், மற்றும் சுரண்டை வங்கி கிளைகளில் இருந்து வழக்குத் தொடரப்பட்ட 29 வழக்குகள் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. இவற்றில் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. மற்ற 28 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் மட்டும் செய்யப்பட்ட வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திங்கள் 23, மார்ச் 2026 12:31:04 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 23, மார்ச் 2026 10:36:36 AM (IST)

அரசு குடியிருப்பில் திமுக தேர்தல் அலுவலகம்? தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவால் சீல் வைப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 10:21:46 AM (IST)

