» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!
வியாழன் 11, ஜூலை 2024 5:56:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாம் வருகிற 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூய்மை பாரத இயக்கம் (ஊ) திட்டத்தின் கீழ் நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம் மூலம் திருநெல்வேலி மாவட்ட ஊரக பகுதிகளில் தூய்மைப் பணிகளில் சிறப்பானதொரு முன்னேற்றத்தினை உருவாக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊரக பகுதிகளில் சுகாதாரம் தொடர்பான தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு (தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி பராமரிப்பு தூய்மை பணியாளர்கள்) உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாம் 13.07.2024 அன்று 9.00 மணிக்கு அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, இராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஆகியஅனைத்து ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடைபெறும் உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




