» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!
வியாழன் 11, ஜூலை 2024 5:56:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாம் வருகிற 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூய்மை பாரத இயக்கம் (ஊ) திட்டத்தின் கீழ் நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம் மூலம் திருநெல்வேலி மாவட்ட ஊரக பகுதிகளில் தூய்மைப் பணிகளில் சிறப்பானதொரு முன்னேற்றத்தினை உருவாக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஊரக பகுதிகளில் சுகாதாரம் தொடர்பான தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு (தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி பராமரிப்பு தூய்மை பணியாளர்கள்) உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாம் 13.07.2024 அன்று 9.00 மணிக்கு அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, இராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஆகியஅனைத்து ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடைபெறும் உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு!!
புதன் 3, டிசம்பர் 2025 8:24:25 AM (IST)

மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி அதிகாரி கைது|
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:32:36 PM (IST)

3வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:04:20 PM (IST)

மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ. 10 லட்சம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:35:27 PM (IST)

புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு: சபாநாயகரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:30:28 AM (IST)

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டங்கள் தமிழகத்தில்... அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
திங்கள் 1, டிசம்பர் 2025 5:05:07 PM (IST)


