» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது
சனி 13, ஜூலை 2024 8:52:46 PM (IST)
மானூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் உள்ள தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தடியம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த சந்தானம் (44) என்பவருக்கும் பூமாரி (42) என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 10.07.2024 அன்று அதிகாலை அளவில் சந்தானம் அவருடைய வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர் சபாபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சந்தானத்திற்கும் பூமாரிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பூமாரி சந்தானத்தை கல்லால் தாக்கி பலத்த ரத்த காயம் ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேற்படி மானூர் வட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் பூமாதியை 13.07.2024 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
