» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது
சனி 13, ஜூலை 2024 8:52:46 PM (IST)
மானூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் உள்ள தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தடியம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த சந்தானம் (44) என்பவருக்கும் பூமாரி (42) என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 10.07.2024 அன்று அதிகாலை அளவில் சந்தானம் அவருடைய வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர் சபாபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சந்தானத்திற்கும் பூமாரிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பூமாரி சந்தானத்தை கல்லால் தாக்கி பலத்த ரத்த காயம் ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேற்படி மானூர் வட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் பூமாதியை 13.07.2024 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 97.98% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்: ஆட்சியர் சுகுமார் தகவல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 12:43:02 PM (IST)

மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவி வெட்டிக் கொலை : நெல்லை வாலிபர் வெறிச்செயல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:31:41 AM (IST)

நடைபயிற்சிக்கு சென்ற ஆசிரியர் வெட்டிக் கொலை: சிறுவன் உட்பட 2பேர் வெறிச்செயல்!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:25:37 AM (IST)

நெல்லையில் தொடர் மழையால் மூழ்கிய பயிர்கள் : லட்சக்கணக்கில் சேதம் - விவசாயிகள் வேதனை!
சனி 29, நவம்பர் 2025 4:15:15 PM (IST)

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)

கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் சபாநாயகர் மு.அப்பாவு..!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:28:14 AM (IST)




