» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது
சனி 13, ஜூலை 2024 8:52:46 PM (IST)
மானூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் உள்ள தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தடியம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த சந்தானம் (44) என்பவருக்கும் பூமாரி (42) என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 10.07.2024 அன்று அதிகாலை அளவில் சந்தானம் அவருடைய வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர் சபாபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சந்தானத்திற்கும் பூமாரிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பூமாரி சந்தானத்தை கல்லால் தாக்கி பலத்த ரத்த காயம் ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேற்படி மானூர் வட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் பூமாதியை 13.07.2024 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!
வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)

காவல் நிலையத்தில் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆஜர்!
வெள்ளி 30, ஜனவரி 2026 10:10:13 AM (IST)

உரிய நேரத்தில் சிறந்த கூட்டணியை அறிவிப்போம் : தென்காசியில் பிரேமலதா பேட்டி
வெள்ளி 30, ஜனவரி 2026 8:28:10 AM (IST)

நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டி: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 29, ஜனவரி 2026 4:43:56 PM (IST)

கல்லிடைக்குறிச்சி மகளிர் அரபிக் கல்லூரியில் 11ஆவது பட்டமளிப்பு விழா
வியாழன் 29, ஜனவரி 2026 8:21:27 AM (IST)

திருநெல்வேலியில் 2480 தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!
புதன் 28, ஜனவரி 2026 5:27:33 PM (IST)

