» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது
சனி 13, ஜூலை 2024 8:52:46 PM (IST)
மானூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் உள்ள தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தடியம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த சந்தானம் (44) என்பவருக்கும் பூமாரி (42) என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 10.07.2024 அன்று அதிகாலை அளவில் சந்தானம் அவருடைய வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர் சபாபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சந்தானத்திற்கும் பூமாரிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பூமாரி சந்தானத்தை கல்லால் தாக்கி பலத்த ரத்த காயம் ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேற்படி மானூர் வட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் பூமாதியை 13.07.2024 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)
