» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் தப்பியோடிய கைதி கைது: கழிவறையில் வழுக்கி விழுந்து காயம்!!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 10:02:56 AM (IST)
தூத்துக்குடியில் போலீசார் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பியோடிய கைதியை தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.

இந்நிலையில் இவரை கடந்த மார்ச் 5ஆம் தேதி விசாரணைக்காக விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது போலீசார் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றாராம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், மதுரையில் சிறுவனை ஆட்டோவில் கடத்தி ரூ. 2 கோடி கேட்ட வழக்கிலும் இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து ஹைகோர்ட் மகாராஜாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவர் கோயம்புத்தூரில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் சென்று ஹைகோர்ட் மகாராஜாவை நேற்று முன்தினம் கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். காவல்துறையினர் விசாரணையின் போது கழிவறையில் வழுக்கி விழுந்து இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மஹாராஜா மீது கொலை முயற்சி, குழந்தை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகளவில் 7 நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக உள்ளது: சபாநாயகர் மு.அப்பாவு பேச்சு
புதன் 19, பிப்ரவரி 2025 4:45:45 PM (IST)

தீவிபத்து எதிரொலி : அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:02:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

KumarAug 1, 2024 - 11:26:53 AM | Posted IP 162.1*****