» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை - பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:53:25 AM (IST)
திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டில் உள்ள BBC காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1500 வீடுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தெற்கு புறவழிச்சாலை, ரிலையன்ஸ் பல்க் அருகில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். ஒரே நாளில் குடிநீர் உடைப்பை சரி செய்யலாம்.
அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். பொது மக்கள் புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் உடைப்பை சரி செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் விரைவாக நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
