» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை - பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:53:25 AM (IST)
திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டில் உள்ள BBC காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1500 வீடுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தெற்கு புறவழிச்சாலை, ரிலையன்ஸ் பல்க் அருகில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். ஒரே நாளில் குடிநீர் உடைப்பை சரி செய்யலாம்.
அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். பொது மக்கள் புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் உடைப்பை சரி செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் விரைவாக நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




