» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை - பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:53:25 AM (IST)
திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டில் உள்ள BBC காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1500 வீடுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தெற்கு புறவழிச்சாலை, ரிலையன்ஸ் பல்க் அருகில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். ஒரே நாளில் குடிநீர் உடைப்பை சரி செய்யலாம்.
அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். பொது மக்கள் புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் உடைப்பை சரி செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் விரைவாக நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செல்போன் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஞாயிறு 18, மே 2025 9:07:08 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு
ஞாயிறு 18, மே 2025 9:04:32 PM (IST)

நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் மின்தடை: மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சனி 17, மே 2025 11:14:31 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)
