» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை - பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:53:25 AM (IST)
திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டில் உள்ள BBC காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1500 வீடுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தெற்கு புறவழிச்சாலை, ரிலையன்ஸ் பல்க் அருகில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். ஒரே நாளில் குடிநீர் உடைப்பை சரி செய்யலாம்.
அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். பொது மக்கள் புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் உடைப்பை சரி செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் விரைவாக நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
