» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாற்கர சாலையில் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்
வியாழன் 5, செப்டம்பர் 2024 8:37:31 AM (IST)

கயத்தாறு அருகே நாற்கர சாலையில் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து விபத்துக்குள்ளானது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆனைகுழி அருள்குன்று நகரைச் சேர்ந்த விவசாயி அருள்தாஸ் மகன். அல்ஜின்கிப்ட் (45). இவர் டாரஸ் லாரியில் நாகர்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு பழைய பஸ், லாரி டயர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். லாரியில் சுமார் 20 டன் டயர்கள் இருந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசன் குளம் நாற்கர சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று பாலத்திலிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபக்க சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கயத்தாறு சுங்கச்சாவடி கிரேட், பணியாளர்கள் லாரியை சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தி. போக்குவரத்தை சரி செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
