» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)
ஒடிசா மாநிலத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்தனர்.
ஒடிசாவிலிருந்து தென்காசிக்கு கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, மாவட்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குத்துக்கல்வலசையிலிருந்து கணக்கப்பிள்ளைவலசை செல்லும் சாலையோரம் நின்ற மதுரையிலிருந்து வந்த லாரியில் சோதனையிட்டனர். அங்கிருந்த நெட்டூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிகுமாரிடமிருந்து 4 நபர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்க முயன்றபோது போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.
இசக்கிகுமார், அம்பை பகுதியைச் சேர்ந்த நயினார் விக்னேஷ், ராஜாராம், நெட்டூர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் அய்யனார்குளம் பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சித் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, லாரி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

