» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஐடிஐயில் பயின்று சான்றிதழ் பெறாதவர்கள் டிச.31-க்குள் பெறலாம்
சனி 7, செப்டம்பர் 2024 11:35:09 AM (IST)
ஐடிஐயில் பயின்று இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என பேட்டை ஐடிஐ துணை இயக்குநர் ஆர்.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 1960 முதல் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் தேசிய தொழில் சான்றிதழ்கள் மற்றும் 2013 முதல் 2017 வரை பருவமுறை மதிப்பெண் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் பெறப்படாமல் உள்ளன. எனவே வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஐடிஐக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
நீண்ட காலமாக இச்சான்றிதழ்கள் உள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படவில்லையெனில் அரசு ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அதற்கு பின்பு சான்றிதழ் வேண்டி வருபவர்கள் அரசு ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் பெறும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)
