» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை: 3 இளைஞர்கள் கைது
திங்கள் 7, அக்டோபர் 2024 10:43:04 AM (IST)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 85 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் சந்தேக நபர்கள் 3 பேர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருநெல்வேலி உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று அந்த 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், 85 போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அவர்கள் மூவரையும் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திருநெல்வேலி நகரத்தை சேர்ந்த சூர்யா (18), மணிகண்டன்(18), மதன் (18) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணப்பாட்டில் யூபிலி 2025ஆம் ஆண்டு நிறைவு மதுவிலக்கு பேரணி
சனி 27, டிசம்பர் 2025 5:50:27 PM (IST)

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)


