» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை: 3 இளைஞர்கள் கைது
திங்கள் 7, அக்டோபர் 2024 10:43:04 AM (IST)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 85 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் சந்தேக நபர்கள் 3 பேர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருநெல்வேலி உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று அந்த 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், 85 போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அவர்கள் மூவரையும் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திருநெல்வேலி நகரத்தை சேர்ந்த சூர்யா (18), மணிகண்டன்(18), மதன் (18) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
