» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை: 3 இளைஞர்கள் கைது
திங்கள் 7, அக்டோபர் 2024 10:43:04 AM (IST)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 85 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் சந்தேக நபர்கள் 3 பேர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருநெல்வேலி உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று அந்த 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், 85 போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அவர்கள் மூவரையும் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திருநெல்வேலி நகரத்தை சேர்ந்த சூர்யா (18), மணிகண்டன்(18), மதன் (18) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்: பெண்கள் விண்ணபிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 26, மே 2026 3:53:11 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசப் பேச்சு: வீடியோ வெளியிட்ட மென்பொருள் பொறியாளர் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:04:35 AM (IST)

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)


