» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை: 3 இளைஞர்கள் கைது
திங்கள் 7, அக்டோபர் 2024 10:43:04 AM (IST)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 85 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் சந்தேக நபர்கள் 3 பேர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருநெல்வேலி உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று அந்த 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், 85 போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அவர்கள் மூவரையும் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திருநெல்வேலி நகரத்தை சேர்ந்த சூர்யா (18), மணிகண்டன்(18), மதன் (18) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் கல்லூரி பேருந்து மோதி விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:47:09 AM (IST)

அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:20:38 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சியர் ஆய்வு
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:43:19 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 12,53,264 வாக்காளர்கள்; 10,635 பேர் நீக்கம்: இறுதி வாக்காளர் பட்டியல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:39:15 PM (IST)

பணகுடி இராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:14:04 PM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

