» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திறந்தவெளியில் சிறுநீர் , மலம் கழித்தால் அபராதம்: பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு
திங்கள் 28, அக்டோபர் 2024 12:15:20 PM (IST)
நெல்லையில் உள்ள பேரூராட்சிகளில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தால் ரூ.100, மலம் கழித்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் உள்ள நிலையில் வடக்கு வள்ளியூர் மற்றும் திசையன் விளை பேரூராட்சிகளில் முதல்கட்டமாக அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் சிறப்புநிலைப் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்கள் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பால வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் பொது கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்தவேண்டும்.
இதனை பயன்படுத்தாமல் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சிறுநீர் கழித்தால் ரூ.100ம், மலம் கழித்தால் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தற்போது ஒவ்வொரு வார்டும் கண்காணிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இதன் மூலம் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்: நெல்லையில் சரத்குமார் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 4:42:33 PM (IST)

