» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொருநை நெல்லை புத்தகத் திருவிழா: சிற்பக் கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
சனி 30, நவம்பர் 2024 11:38:56 AM (IST)
பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின்போது ஓவிய சிற்பக் கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

கலை பண்பாட்டுத்துறை சார்பாக, ஓவிய-சிற்பக் கலைக் கண்காட்சி திருநெல்வேலி வர்த்தக மையத்தில் பொருநை நெல்லை புத்தக திருவிழா-2025 நடைபெறும் போது நடத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில் திருநெல்வேலி மண்டலத்தின் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி விருதுநகர் மற்றும் தென்காசி) மாவட்டங்களில் உள்ள ஓவிய சிற்பக்கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை கண்காட்சியாக வைத்து தெரிவு செய்வதற்கு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தெரிவு செய்யப்படும். ஓவிய சிற்பக் கண்காட்சியில் முதல் பரிசாக ரூ.5000/- வீதம் 7 கலைஞர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3000/- வீதம் 7 கலைஞர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2000/- வீதம் 7 கலைஞர்களுக்கும் காசோலையாக வழங்கப்படவுள்ளது.
எனவே, திருநெல்வேலி மண்டலத்தின் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி விருதுநகர் மற்றும் தென்காசி) மாவட்டங்களில் உள்ள ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியப் படைப்புகளை கண்காட்சியாக வைத்திட தன்விவரக் குறிப்பு மற்றும் படைப்புகள் எண்ணிக்கை படைப்புகளின் புகைப்படங்கள் விவரங்களுடன் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலர் ஆ குடியிருப்பு திருநெல்வேலி-7 என்ற முகவரிக்கு 15-12-2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டலக் கலை பண்பாட்டு மையம் தொலைபேசி எண்.0462-2901890 மற்றும் 9487059638, 8122610700 மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)
