» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்
வியாழன் 9, ஜனவரி 2025 7:55:56 AM (IST)
குரும்பூர் அருகே பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணித்த 40 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. நேற்று மாலையில் பள்ளி முடிந்தவுடன், 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிப் பேருந்து ஏரலை நோக்கி சென்று கொண்டிருந்தது. குரும்பூர் அடுத்துள்ள பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் பள்ளிப் பேருந்தை பக்கவாட்டில் திருப்பி உள்ளார்.
இதில் நிலைதடுமாறிய அந்த பஸ் அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அந்த வழியாக சென்றவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிசென்று பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
இதில், பஸ்சில் இருந்த 40 மாணவ, மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.2 இலட்சம் நன்கொடை!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:15:31 PM (IST)

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:07:43 PM (IST)

நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் : டிஆர்ஓ தகவல்
திங்கள் 29, டிசம்பர் 2025 12:18:32 PM (IST)

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)



கேள்விJan 9, 2025 - 08:41:13 AM | Posted IP 162.1*****