» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஜன.15 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கம்!
வெள்ளி 10, ஜனவரி 2025 11:42:11 AM (IST)
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வருகிற 15-ம்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - சென்னை - நெல்லை இடையே 8 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்' ரயில்கள் (20666/20665) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து வருகிற 11-ம் தேதி முதல் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளை அதிகரிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ம்தேதி முதல் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
