» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஜன.15 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கம்!
வெள்ளி 10, ஜனவரி 2025 11:42:11 AM (IST)
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வருகிற 15-ம்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - சென்னை - நெல்லை இடையே 8 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்' ரயில்கள் (20666/20665) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து வருகிற 11-ம் தேதி முதல் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளை அதிகரிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ம்தேதி முதல் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 27, அக்டோபர் 2025 8:51:28 AM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)




