» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஜன.15 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கம்!
வெள்ளி 10, ஜனவரி 2025 11:42:11 AM (IST)
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வருகிற 15-ம்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - சென்னை - நெல்லை இடையே 8 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்' ரயில்கள் (20666/20665) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து வருகிற 11-ம் தேதி முதல் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளை அதிகரிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ம்தேதி முதல் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
