» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)
நெல்லை அருகே பத்தமடையில் நிலப்பிரச்சினை காரணமாகக் காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி ஒருவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்துள்ளார். பலத்த தீக்காயமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள பத்தமடை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42). தச்சுத் தொழிலாளியான இவருக்கும், இவருடைய அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வழிபாதை நிலம் தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நிலப்பிரச்சினை காரணமாகக் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த சீனிவாசன், நேற்று காலையில் பத்தமடை காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். காவல் நிலையத்தின் முன்புறம் வந்த அவர், திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்துத் தன் உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
தீப்பற்றி உடல் எறிந்த நிலையில் அலறியபடி அவர் காவல் நிலையத்திற்குள் ஓடியுள்ளார். அங்கிருந்த போலீசார் துரிதமாகச் செயல்பட்டு, தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துக் காப்பாற்றினர். இச்சம்பவத்தில் பலத்த தீக்காயமடைந்த சீனிவாசனை மீட்ட போலீசார், உடனடியாகச் சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துப் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலப்பிரச்சினை மற்றும் தற்கொலை முயற்சி குறித் துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)

நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 9 பேர் மீது வழக்குப்பதிவு!
சனி 20, ஜூன் 2026 11:03:42 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா கோலாகல தொடக்கம்:ஜூன் 28-ல் பெருந்தேரோட்டம்!
சனி 20, ஜூன் 2026 10:40:35 AM (IST)

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)


