» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருவரைப் பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹபிபர் ரகுமான் (28) மற்றும் அஸிமுல் அலி (22) ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தங்கித் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், அஸிமுல் அலியின் உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று மாலையில் உறவினரைப் பார்ப்பதற்காக இருவரும் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது, அங்குப் பணியில் இருந்த 22 வயதுடைய பெண் ஊழியரிடம் இருவரும் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடனடியாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த ஹபிபர் ரகுமான் மற்றும் அஸிமுல் அலி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory