» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

சாலை விபத்தில் உயிரிழந்த லோடுமேனின் குடும்பத்தினருக்கு ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மோட்டார் விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை 1-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (மோட்டார் விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம்) MCOP எண் 1152/2023 மற்றும் MCOP எண் 1223/2023 ஆகிய மனுக்கள் விசாரணைக்கு வந்தன.சாலை விபத்தில் உயிரிழந்த லோடுமேன் மணிமாறனின் மனைவி ஜெயலட்சுமி, சிறுமகள் அங்கலேஸ்வரி, குடும்ப உறுப்பினர்களான பஞ்சவர்ணம் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் சார்பில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், குடும்பத்தின் முக்கிய ஆதராவாக இருந்த மணிமாறன் உயிரிழந்ததால் தாங்கள் பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி டி. செல்வம் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. விபத்தில் தொடர்புடைய டிப்பர் லாரியின் (TN 20 CY 5629) உரிமையாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனம் இணைந்து மனுதாரர்களுக்கு ரூ.66,26,000 இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தொகை செலுத்தும் நாள் வரை ஆண்டுக்கு 7.5% வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அ. செல்வராஜ் ஆஜராகி வாதாடினார்.
இழப்பீட்டுத் தொகை பகிர்வு:

நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீட்டுத் தொகை பின்வருமாறு பிரித்து வழங்கப்படுகிறது:

ஜெயலட்சுமி (மனைவி): ரூ.22,26,000

அங்கலேஸ்வரி (மகள்): ரூ.22,00,000

பஞ்சவர்ணம்: ரூ.11,00,000

கிருஷ்ணசாமி: ரூ.11,00,000

சிறுமி அங்கலேஸ்வரிக்கான தொகையை அவர் 18 வயது (முழுவயது) அடையும் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக (FD) செலுத்த வேண்டும் என்றும், அதிலிருந்து வரும் வட்டித் தொகையை நீதிமன்ற நிபந்தனைகளின்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதே விபத்தில் காயமடைந்த மற்றொரு நபருக்கு ரூ.95,000 இழப்பீடு வழங்கவும் தீர்ப்பாய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory