» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையைச் சேர்ந்தவருக்கு துபாய் லாட்டரியில் ரூ.2¼ கோடி பரிசு!!
சனி 1, பிப்ரவரி 2025 5:27:21 PM (IST)

நெல்லையை சேர்ந்த முகம்மது ஆதம் என்பவருக்கு துபாய் லாட்டரியில் ரூ.2¼ கோடி பரிசு அடித்துள்ளது.
துபாயில் தனியார் நிறுவனம் சார்பில் நடந்த லாட்டரி குலுக்கலில் நெல்லையை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் என்பவருக்கு ரூ.2¼ கோடி பரிசு அடித்துள்ளது. இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
தனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது குறித்து பீர் முகம்ம்து ஆதம் கூறியதாவது: நான் கடந்த 2007-ம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவியும் மகளும் சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். துபாயில் 3 ஆண்டுகளாக நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்கி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)
