» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி சரகத்தில் கங்கைகொண்டான் முதல் செழியநல்லூர் வரை, நெல்லை சந்திப்பு அண்ணாசிலை முதல் பிரசன்னா காலனி வரை, பெருமாள்புரம் முதல் பிரசன்னா காலனி வரை, IRT பாலிடெக்னிக் விலக்கு முதல் அரவிந் கண் மருத்துவமனை வரை, நெல்லை சந்திப்பு இரயில்வே ஸ்டேசன் முதல் தாமஸ்நகர் வரை, நெல்லை டவுண் ஆர்ச் முதல் வல்லவன்கோட்டை கீழுர் வரை,
நெல்லை டவுண் சந்திபிள்ளையார் கோவில் முதல் செல்வகணபதிநகர் வரை, நெல்லை சந்திப்பு இரயில்வே ஸ்டேசன் முதல் ஆல்நகர் வரை, நெல்லை சந்திப்பு இரயில்வே ஸ்டேசன் முதல் பாளை பேருந்து நிலையம் வழியாக ஜான்சன் நகர் சாய்பாபா கோவில் வரை, நெல்லை சந்திப்பு இரயில்வே ஸ்டேசன் முதல் வண்ணாரப்பேட்டை ரோஸ்மேரி மருத்வமனை வழியாக ஜான்சன் நகர் சாய்பாபா கோவில் வரை, பாளைமேட்டுத்திடல் மருத்துவமனை முதல் அரியநாயகபுரம் வரை, பாளைபேருந்து நிலையம் முதல் இட்டேரி வரை, இராமையன்பட்டி விரிவாக்கம் முதல் மானூர் யூனியன் அலுவலகம் வரை 13 வழித்தடங்களிலும்,
அம்பாசமுத்திரம் சரகத்தில் மேலச்செவல் முதல் சேரன்மகாதேவி வரை, அம்பாசமுத்திரம் முதல் முக்கூடல் வரை, வீரவநல்லூர் முதல் கல்லிடைகுறிச்சி பேருந்து நிலையம் வரை, அம்பாசமுத்திரம் முதல் பாப்பாக்குடி வரை, முக்கூடல் முதல் சீதபற்பநல்லூர் வரை 5 வழித்தடங்களிலும்,
வள்ளியூர் சரகத்தில் களக்காடு பேருந்து நிலையம் முதல் கலுங்கடி நாடார் குடியிருப்பு விலக்கு வரை, மாவடி முதல் ஏர்வாடி வரை, திருமலாபுரம் முதல் திருக்குறுங்குடி வரை, விலவன்புதூர் முதல் ஏர்வாடி வரை, வள்ளியூர் ரயில்வே ஸ்டேசன் முதல் நான்குனேரி வரை, வள்ளியூர் முதல் தளபதிசமுத்திரம் வரை 6 வழித்தடங்கள் என மொத்தம் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப் பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து Online–ல் கட்டணம் ரூ.1500+100=ரூ.1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து,
விலாச சான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் 19.02.2025 முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், திருநெல்வேலி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
