» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு: சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது
ஞாயிறு 9, மார்ச் 2025 7:18:06 PM (IST)
நெல்லையில் போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அமுதா ராணி. இவரது கணவர் வனராஜ் (55). இவர்கள் பாளை பெருமாள்புரம் பொதிகை நகரில் உள்ள தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனராஜ், 35 வயது பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் நெல்லையில் காவல்துறையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் நிலையில், அவர் தனது மனைவியை அழைத்துச்சென்று பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஏட்டு மனைவிக்கு, வனராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் மனைவிக்கு போலீசின் கணவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நெல்லை மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான வனராஜின் தந்தை பட்டாலியனில் இன்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

