» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

இட்டமொழியில் பள்ளி மாணவி ஐ.மதுமிதா என்பவர், தனது தந்தை இறந்த சோகத்திலும் இன்று நடைபெறும் கணிதத் தேர்வு எழுத சென்றுள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள விஜயச்சம்பாடு வடலிவிளை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (55). இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் மதுமிதா இட்டமொழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிஸஸ்-2 படித்து வருகிறார். அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் மதுமிதாவிற்கு இன்று பிளஸ்-2 கணிததேர்வு நடைபெற்றது. இதற்கிடையே தந்தை இறந்த நிலையிலும் தந்தையின் பூத உடலை வணங்கி விட்டு மாணவி மதுமிதா தனது பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். தந்தை இறந்த சோகத்திலும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் மாணவியை பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

