» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள்: ஆட்சியர் ஆணை வழங்கினார்!
வெள்ளி 21, மார்ச் 2025 5:51:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் மட்டும் வரப்பெற்றதால் அவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 9 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26.03.2025 அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 180 விண்ணப்பங்களுக்கான குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு, 19 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயங்குவதற்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், துணை போக்குவரத்து ஆணையர் (திருநெல்வேலி) என்.ரவீசந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (திருநெல்வேலி) என்.ஆர்.சரவணன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் டி.ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)
