» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

புதன் 26, மார்ச் 2025 8:26:50 PM (IST)

நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன்  உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த பர்கிட் மாநகரம் அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி பாண்டியன் (76). இவருக்கு மனைவி மற்றும் 6 பிள்ளைகள் உள்ளனர். இவர் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் முறையே ஆலங்குளம் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

தொடர்ந்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக கருப்பசாமி பாண்டியன் அறிவிக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். ஜெயல லிதாவின் நன்மதிப்பபை பெற்ற அவர் நெல்லை மாவட்டத்தின் நெப்போலியன் என்றும், கானா என்றும் தொண்டர்களால் அழைக்கப்பட்டார். 

பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2000-ம் ஆண்டு கால கட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.விலும் முக்கிய நிர்வாகியாக வலம் வந்த அவர் கடந்த 2006-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாார். தொடர்ந்து அங்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் தி.மு.க.வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகி 2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையில் அ.தி.மு.க. இயங்க தொடங்கியபோது பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். 

தற்போது அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக இருந்து வரும் கருப்பசாமி பாண்டியன் வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவின் தலைமையில் இயங்கும் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

சமீப காலமாகவே வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு இருந்து வந்தாலும், கட்சி பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்தார். கடந்த 1 வாரமாக சற்று உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு மாநகர் மாவட்ட செய லாளர் தச்சை கணசராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர. அவரது உடல் அடக்கம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருத்து கிராமத்தில் நடை பெறுகிறது.

கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory