» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
புதன் 26, மார்ச் 2025 8:26:50 PM (IST)
நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தொடர்ந்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக கருப்பசாமி பாண்டியன் அறிவிக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். ஜெயல லிதாவின் நன்மதிப்பபை பெற்ற அவர் நெல்லை மாவட்டத்தின் நெப்போலியன் என்றும், கானா என்றும் தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.
பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2000-ம் ஆண்டு கால கட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.விலும் முக்கிய நிர்வாகியாக வலம் வந்த அவர் கடந்த 2006-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாார். தொடர்ந்து அங்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் தி.மு.க.வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகி 2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையில் அ.தி.மு.க. இயங்க தொடங்கியபோது பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தற்போது அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக இருந்து வரும் கருப்பசாமி பாண்டியன் வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவின் தலைமையில் இயங்கும் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
சமீப காலமாகவே வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு இருந்து வந்தாலும், கட்சி பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்தார். கடந்த 1 வாரமாக சற்று உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு மாநகர் மாவட்ட செய லாளர் தச்சை கணசராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர. அவரது உடல் அடக்கம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருத்து கிராமத்தில் நடை பெறுகிறது.
கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST)
