» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறுமியை துன்புறுத்திய முதியவருக்கு 3½ ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி 28, மார்ச் 2025 5:21:36 PM (IST)

சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவருக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு வெங்கட்ராயபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த அந்தோணி (83), ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் நாங்குநேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்தோணி மீது வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (27,3,2025) நீதிபதி சுரேஷ்குமார் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதில் போக்சோ வழக்கு குற்றவாளியான அந்தோணிக்கு மூன்றரை (3 1/2) ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார் மற்றும் நாங்குநேரி போலீசாரை நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory