» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை : வாலிபர் போக்சோவில் கைது!
வெள்ளி 28, மார்ச் 2025 8:14:46 PM (IST)
நாங்குநேரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம், நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (23). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிளஸ் -1 மாணவியிடம் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து மாணவியிடம் சமூக வலைதளங்களில் பேசிவந்த சுந்தர், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு தெரியவந்ததையடுத்து அவர் கண்டித்துள்ளார். உடனே மாணவி வாலிபரிடம் பேசுவதை நிறுத்தினார். ஆனாலும் சுந்தர் மாணவியை தன்னிடம் பேசுமாறு தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். அடிக்கடி அந்த மாணவியை வழிமறித்து தன்னிடம் பேசுமாறு அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST)
