» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்: 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
சனி 29, மார்ச் 2025 4:58:51 PM (IST)

புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வீரபாண்டியன் பட்டணத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்குத் தந்தையர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் சாம்பல் புதன் அன்று தவக்காலம் தொடங்கி 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தில் பலர் அசைவம் தவிர்த்து விரதம் இருப்பர். இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் புனித வெள்ளிக்கிழமை அன்று மூட வேண்டும் என மதுவிலக்கு சபையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டணத்தில் ஊர் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு சபைனர் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன், வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தை அலாசியுஸ், சிலுவை டிமெஸ், ஏரல் ரவீந்திரன் பர்னாண்டோ, புன்னைகாயல் டைட்டஸ், ஜீவாநகர் இருதயராஜ், கொம்புத்துறை பிரதிஸ் காட்டார், அமலிநகர் வில்லியம் சந்தானம், மணப்பாட ஜெயகர், ஆறுமுகநேரி வளன், பழைய காயல் ராஜேஷ், ஆலந்தலை சில்வெஸ்டர், ஊர்நலக்கமிட்டி தலைவர்கள் அமலிநகர் செல்வராஜ், ஆலந்தலை ஆசைத்தம்பி, ஜீவாநகர் ஜெயசிங், கொம்புத்துறை பிரான்சிஸ், சிங்கித்துறை மனுவேல், பழைய காயல் ஆரேக்கியராஜ், மணப்பாடு யாகப்பர் ஆலய கமிட்டி கபிரியேல், மற்றும் வீரபாண்டியன்பட்டணம் கப்பல் மாலுமிகள் சங்கத்தினர், துறைமுக கமிட்டியினர் உள்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
எவன்Mar 31, 2025 - 12:23:10 PM | Posted IP 162.1*****
சாராய ஆலை நடத்தும் தீ முக குடும்பத்துக்கு துட்டு வேணும்ல
GaneshMar 29, 2025 - 07:07:11 PM | Posted IP 162.1*****
ஈஸ்டர் அன்றும் சேர்த்து மூடவேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் புதிய தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி துவக்கம்
புதன் 2, ஏப்ரல் 2025 5:56:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

சொத்துத்தகராறில் தந்தையை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:17:04 AM (IST)

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:27:13 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி? நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:42:15 PM (IST)

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST)

Bible LearnerMar 31, 2025 - 06:05:09 PM | Posted IP 172.7*****