» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் திடீர் ஆய்வு!

ஞாயிறு 13, ஏப்ரல் 2025 8:56:28 AM (IST)



தூத்துக்குடியில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆய்வு செய்தார். 

தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து நகர உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள  நிலுவையில் உள்ள வழக்குகள் குற்றப்பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை திடீரென வருகை தந்து ஆய்வு செய்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக  பராமரிக்கப்படுவதை பார்த்து உதவி காவல் கண்காணிப்பாளர் மதனை பாராட்டினார். 

நகர உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் ஆன தாளமுத்து நகர், வடபாகம், தென்பாகம், மத்திய பாகம், முத்தையாபுரம்,  தெர்மல் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் தங்கள் காவல் நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள வழக்குகள் குற்ற வழக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்து ஏடிஜிபி டேவிட்சன்  தேவா ஆசீர்வாதத்திடம் விளக்கம் அளித்தனர். பின்னர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்


மக்கள் கருத்து

ஒருவன்Apr 13, 2025 - 06:16:45 PM | Posted IP 172.7*****

சூப்பர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory