» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றம்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 10:52:32 AM (IST)
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் 3வது முறையாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவார் முத்தமிழ் அரசன். இவர் மீது பல்வேறு புகார்கள் எதிரொலியாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் மீண்டும் தென்பாகம் காவல் நிலையத்தில் பணி அமர்த்தபட்டார். இதற்கிடையே வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே தென்பாகம் காவல் நிலையத்தில் பணி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை அவர் தாக்கியதாகவும், அதனால் அந்த வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
தமிழன்Apr 14, 2025 - 01:26:40 PM | Posted IP 104.2*****
மொத்தத்தில் நேர்மையான அதிகாரிகளை நல்லவர்களாக இருக்கவிடுவதில்லை
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

வழக்கறிஞர்கள்Apr 16, 2025 - 06:58:49 PM | Posted IP 172.7*****