» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் படகில் பதுக்கிய 3 அரியவகை ஆமைகள் உயிருடன் மீட்பு!
வெள்ளி 9, மே 2025 8:38:48 AM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக படகில் பதுக்கி வைத்திருந்த 3 அரியவகை ஆமைகளை வனத்துறையினர் மீட்டு வான்தீவு கடலில் பாதுகாப்பாக விட்டனர்.
தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் சில உயிரினங்கள் வேகமாக அழிந்து வருவதால், அந்த உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
அதன்படி, ஆமைகளும் வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி கடல் பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த பச்சை நிற ஆமைகள் காணப்படுகின்றன. இதனால் தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை பிடிக்கிறார்களா? என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனஉயிரின சரக அலுவலருக்கு தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் ஒரு படகில் கடல் ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த படகை சோதனை செய்தனர். அந்த படகில் 3 அரிய வகையைச் சேர்ந்த பச்சைநிற ஆமைகள் வலைக்குள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
ஒரு ஆமை சுமார் 5 அடி நீளமும், 250 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. மற்ற ஆமைகள் தலா 80 கிலோ, 30 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. உடனடியாக அதிகாரிகள் 3 ஆமைகளையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் உரிய பரிசோதனைக்கு பிறகு 3 ஆமைகளையும் படகில் ஏற்றி வான்தீவு பகுதியில் உள்ள கடலில் பாதுகாப்பாக விட்டனர். மேலும், படகில் விற்பனைக்காக ஆமைகளை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)





தூத்துகுடிகாரன்மே 9, 2025 - 09:24:54 AM | Posted IP 104.2*****