» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் படகில் பதுக்கிய 3 அரியவகை ஆமைகள் உயிருடன் மீட்பு!
வெள்ளி 9, மே 2025 8:38:48 AM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக படகில் பதுக்கி வைத்திருந்த 3 அரியவகை ஆமைகளை வனத்துறையினர் மீட்டு வான்தீவு கடலில் பாதுகாப்பாக விட்டனர்.
தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் சில உயிரினங்கள் வேகமாக அழிந்து வருவதால், அந்த உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
அதன்படி, ஆமைகளும் வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி கடல் பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த பச்சை நிற ஆமைகள் காணப்படுகின்றன. இதனால் தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை பிடிக்கிறார்களா? என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனஉயிரின சரக அலுவலருக்கு தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் ஒரு படகில் கடல் ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த படகை சோதனை செய்தனர். அந்த படகில் 3 அரிய வகையைச் சேர்ந்த பச்சைநிற ஆமைகள் வலைக்குள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
ஒரு ஆமை சுமார் 5 அடி நீளமும், 250 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. மற்ற ஆமைகள் தலா 80 கிலோ, 30 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. உடனடியாக அதிகாரிகள் 3 ஆமைகளையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் உரிய பரிசோதனைக்கு பிறகு 3 ஆமைகளையும் படகில் ஏற்றி வான்தீவு பகுதியில் உள்ள கடலில் பாதுகாப்பாக விட்டனர். மேலும், படகில் விற்பனைக்காக ஆமைகளை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்-மகன் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது; இருதரப்பு மோதல் - எஸ்பி நேரில் ஆய்வு
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:52:27 AM (IST)

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 29, ஏப்ரல் 2026 11:37:36 AM (IST)

விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: சார் ஆட்சியர் ஆஜராகி விளக்கம் - உயர்நீதிமன்றம் விசாரணை
புதன் 29, ஏப்ரல் 2026 11:33:46 AM (IST)

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)



தூத்துகுடிகாரன்மே 9, 2025 - 09:24:54 AM | Posted IP 104.2*****