» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மடத்தூரில் 13ம் நூற்றாண்டின் கமலை கிணற்றினை பாதுகாத்திட தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 8:43:38 AM (IST)
தூத்துக்குடி மடத்தூரில் காணப்படும் 13ம் நூற்றாண்டின் கல்வெட்டோடு கூடிய கமலை கிணற்றினை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிணறானது பொ.ஊ1234ம் ஆண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தினை சார்ந்தது என்பதனை இதில் காணப்படும் மங்கள சொற்களோடு ஆரம்பிக்கும் பாடல் கல்வெட்டின் வாயிலாக புலனாகிறது என்றும், இந்த தகவலானது ஆய்வாளரால் ஆவணம் இதழில் 34ஃ2023 தொகுப்பில் 57ம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கிணறானது தற்போது பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளதால் தயவாய் பாதுகாத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக்கி நமது பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மனன் சுந்தரபாண்டியனின் நல்லெண்ணம் குன்றாது காத்திட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சார்பாக கோரிக்கைகளை பதிவு செய்கின்றோம் என்றார். மேலும், இது தொடர்பாக மாநகர ஆணையாளருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக கோரிக்கையினை சமர்ப்பத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

ஞான செல்வன்Jun 18, 2025 - 06:58:43 PM | Posted IP 104.2*****