» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காவலர் பலி : தூத்துக்குடி அருகே சோகம்

வியாழன் 19, ஜூன் 2025 10:15:38 AM (IST)

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 2 மாதங்களுக்கு முன்பு ஓட்டை விழுந்தது இதனால் வாகனங்கள் அனைத்தும் ஒருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று பாலத்தில் நெல்லை மாவட்டம் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பேரிகார்டில் எதிர்பாராத விதமாக  மோதியதில் படுகாயம் அடைந்தார் 

இதுகுறித்து, தகவல் அறிந்த முறப்பநாடு  காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் பாளையங்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரவில் பாலத்தில் இருள் சூழ்ந்திருந்த வேளையில் ஆங்காங்கே கிடந்த பேரிகார்டுகளை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.  

முறப்பநாடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் தென்காசி மாவட்டம், ஆலங்குளம், முத்துகிருஷ்ணபேரி காமராஜர் நகரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சங்கர் குமார் (31) என்பவர் பேரிகார்டுகளை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் தடுப்புச் சுவரில் கை வைத்த போது, பேலன்ஸ் கிடைக்காமல் எதிர்பாராத விதமாக, ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். 

இதையடுத்து மற்ற காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சம்பவம் நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்பி சுகீர் மற்றும் போலீசார் பார்வையிட்டனர் மேலும் பலியான போலீஸ்காரர் சங்கர்குமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த காவலருக்கு சௌமியா என்ற மனைவியும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

M BabuJun 20, 2025 - 08:00:32 AM | Posted IP 172.7*****

ulagathulaye athikam ottai odasal palam ithu than

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory