» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சேரன்மகாதேவியில் போலீஸ் - பொதுமக்கள் நட்புறவு விழிப்புணர்வு கூட்டம்!

புதன் 25, ஜூன் 2025 10:25:15 AM (IST)



திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நட்புறவு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவுபடி சேரன்மகாதேவி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் ஆலோசனைப்படி முன்னீர் பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையில் சுப்ரமணியபுரம் கிராமத்தில் பொதுமக்கள் காவல்துறை இடையேயான கூட்டம் நடைபெற்றது. 

சுப்ரமணியபுரம் கிராம சமூக ஆர்வலர்கள் ஏ.சி. துறை மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பொதுமக்களுக்கு இடையே நட்புறவையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் பேசினார்

பின்னர் சுப்பிரமணியபுரத்தில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்களை 2 மாணவிகளுக்கும். பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 3 மாணவ மாணவிகளுக்கும் புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றும்போதைப் பொருள்களுக்கு அடிமையாக மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory