» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக அருவிகளில் குளிக்க தடை!
வியாழன் 26, ஜூன் 2025 11:06:06 AM (IST)
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் 3வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கடந்த 23-ந் தேதி மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் புலியருவி, பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலையில் பழைய குற்றாலம், புலியருவிக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்றும் தண்ணீர் குறையாததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக இன்றும் (26-06-2025) சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடை முன் வாலிபர் வெட்டிக்கொலை : காவல் நிலையம் முன் உறவினர்கள் போராட்டம்!
ஞாயிறு 29, ஜூன் 2025 9:58:52 AM (IST)

நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது: உயர்நீதிமன்றம்
வெள்ளி 27, ஜூன் 2025 3:58:10 PM (IST)

தொழில் மைய அலுவலகத்தில் வாகனங்கள் ஏலம் : ஜூலை 14 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 3:28:34 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கடன் இலக்கீடாக ரூ.20360.78 கோடி நிர்ணயம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, ஜூன் 2025 12:44:55 PM (IST)

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்!!
வெள்ளி 27, ஜூன் 2025 10:24:18 AM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வியாழன் 26, ஜூன் 2025 3:54:36 PM (IST)
