» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98.81 இலட்சம் மதிப்பில் உபகரணங்கள்: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

ஞாயிறு 29, ஜூன் 2025 12:49:57 PM (IST)



திருநெல்வேலியில் 1231 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98.81  இலட்சம் மதிப்பில் உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில்  இன்று நடைபெற்ற விழாவில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் சமுதாய பொறுப்பு நிதித் திட்டத்தின் கீழ்;  ரூ.98.81  இலட்சம் மதிப்பில் 1231 மாற்றுத்திறனாளி உபகரணங்களை பயனாளிகளுக்கு   நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார்,  பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா  துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை மேலாளர் பிரகதீஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
      
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்   செல்வலெட்சுமி அபிதாப், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சிவசங்கரன், அலிம்கோ நிறுவன மேலாளர்கள் பி.கே.குப்தா, ரிஷப் மெக்ரோட்ரா, மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory