» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)
நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட மணப்பாறை மற்றும் கொளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களில் நடந்து வரும் பராமரிப்பு பணி காரணமாக அந்த பாதையில் செல்லும் ஒரு சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்கு புதன்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 9,16,30-ஆம் தேதிகளில் மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
அதேபோல, நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரயில்கள் (வ.எண்.06029/06030) வருகிற 6-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

