» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலைப் பணிகள்: மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு
புதன் 30, ஜூலை 2025 4:53:00 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் இன்று (30.07.2025) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி டவுண் செண்பகப்பிள்ளை தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு சிமெண்ட் குழாய் பதித்து, சாலையில் கான்கிரீட் போடும் பணியினையும், நயினார் குளம் பகுதியில் சாலை அமைக்கப்படவுள்ள பகுதியினையும், நெல்லையப்பர் கோவில் வடக்கு, மேற்கு ரத வீதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மானூர் ஊராட்சி ஒன்றியம் வல்லவன்கோட்டை முதல் நரியூத்து செல்லும் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், மேலபாலாமடை முதல் காட்டாம்புளி வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தாழையூத்து நாஞ்சான்குளம் ரஸ்தா செல்லும் சாலை 1.8 கி.மீ சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், தச்சநல்லூர் முதல் தாழையூத்து வரை சாலை அமைக்கப்படவேண்டிய இடத்தினையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சி பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, சாலை பணிகளை தரமானதாகவும் குறிப்பிட்ட கால நிர்ணயத்திற்குள் பணிகளை விரைந்து முடித்திடவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வில், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் , உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, கோட்டப்பொறியாளர் ராஜசேகர் , உதவி கோட்டப்பொறியாளர் சண்முகநாதன் , உதவி பொறியாளர் அன்பரசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

