» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
புதன் 3, செப்டம்பர் 2025 3:37:09 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சிங்கிகுளம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்களான முத்துமாரி (21), ஞான பாண்டியன் (19) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து அவர் மேற்சொன்ன 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவின்பேரில், முத்துமாரி, ஞான பாண்டியன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:27:07 PM (IST)

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு : பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து சபாநாயகர் மரியாதை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:43:11 AM (IST)

நெல்லை திருமண்டல தேர்தலை உடனே நடத்த வேண்டும்: முன்னாள் லே செயலர் வேதநாயகம் வலியுறுத்தல்
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:28:27 AM (IST)

ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)

ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)
