» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)
திருநெல்வேலியில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக தன்னார்வலர் நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல் மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக இயங்கும் ஆட்டோக்களை கட்டுப்படுத்துதல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும் அனைத்து பேருந்துகளின் கால அட்டவணை வழித்தட வரைபடம் மற்றும் கட்டண விபரம் பயணிகளுக்கு தெரியும் வகையில் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளில் 18 வயதிற்கு குறைவான மாணாக்கர்கள் வாகனங்களில் வருவதை பள்ளி நிர்வாகம் கண்டித்து அவ்வாறு நடைபெறாமல் முற்றும் தடுக்க வேண்டுமென அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு தெரிவிக்க கோரப்பட்டது.
ஜங்ஷன் முதல் புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் பேருந்துகளை இரவு நேரங்களில் பேட்டை வரை நீடித்து தருமாறும், பேட்டையை ஆரம்ப நிலையாகக் கொண்டு புதிய பேருந்து நிலையம் வரை புதிய வழித்தட வசதிகள் ஏற்படுத்தி தருமாறும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு தெரிவிக்க கோரப்பட்டது. அதிக ஓசை எழுப்பும் இருசக்கர வாகனங்கள் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பொது செயலாளர் ஜாபர் அலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொது செயலாளர் கோ.கணபதி சுப்ரமணியன் மற்றும் மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் பொருளாளர் ஆர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)

திமுக அரசின் அலட்சியத்தால் தாமிரபரணி முற்றிலும் சீரழிந்துள்ளது: நயினார் நாகேந்திரன் அறிக்கை
புதன் 10, செப்டம்பர் 2025 3:50:08 PM (IST)
