» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்தியன் வங்கியில் நெட்வொர்க் பிரச்சனை: வாடிக்கையாளர்கள் அவதி

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:59:35 AM (IST)



தூத்துக்குடியில், இந்தியன் வங்கியில் இன்று 2வது நாளாக நெட்வொர்க் பிரச்சனை தொடர்வதால் வங்கி சேவை பாதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள்  அவதியடைந்தனர். 

தூத்துக்குடி பீச் ரோட்டில், சப் கலெக்டர் அலுவலகம் அருகே இந்தியன் வங்கியின் பிரதான கிளை இயங்கி வருகிறது. இந்த கிளையை ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல் வங்கியில் நெட்வொர்க் முடங்கியது. இதனால் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது, மற்றும் மற்ற பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் இன்று காலையிலும் நெட்வொர்க் கோளாறு சரி செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு அலுவல் இடையே வங்கியில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, நெர்வொர்க் பிரச்சனை தொடர்பாக வங்கியில் ஒரு கருவி மாற்றப்பட்டது. அதன் பின்னரும் சரி செய்ய முடியவிலலை. எனினும் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

மகிழ்Sep 16, 2025 - 06:22:07 PM | Posted IP 104.2*****

வங்கி சேவை உடனடியாக சரி செய்து எனது பரிவர்த்தனை மேற்கொண்டமைக்கு நன்றி மேலாளர் அவர்களுக்கு

AlexanderSep 16, 2025 - 06:20:28 PM | Posted IP 162.1*****

இன்று சரி செய்யப்பட்டு காசோலை செலுத்தி வந்தேன்

முருகன்Sep 16, 2025 - 06:19:01 PM | Posted IP 104.2*****

இன்று இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு எனது பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிவடைந்தது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory