» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கரூர் சம்பவம் எதிரொலியாக வழக்குப்பதிவு: புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு!
ஞாயிறு 28, செப்டம்பர் 2025 7:16:38 PM (IST)
கரூர் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 39 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பலியானர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் கரூரில் பெரும் சோகமே ஏற்பட்டுள்ளது.
பல அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். தற்போது, கரூர் காவல்துறை சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச்செயலர் சி. டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் மற்றும் மதியழகன் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் பிரச்னையின் தீவிரத்தால் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. கரூர் நெரிசல் பலிகளைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)
