» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசம்: வனத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை!
சனி 4, அக்டோபர் 2025 10:35:49 AM (IST)
விக்கிரமசிங்கபுரத்தில் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடிகளை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான அனவன்குடியிருப்பு, பசுக்கிடைவிளை, பொதிகையடி, மேட்டு தங்கம்மன் கோவில் தெரு உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் விக்கிரமசிங்கபுரம் மேட்டு தங்கம்மன் கோவில் தெருவில் ரேஷன் கடை அருகே உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் 3 கரடிகள் புகுந்தன. அவைகள், கோவிலில் இருந்த பூஜை பொருட்களை சேதப்படுத்தின. மேலும் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த எண்ணெயை குடித்து சென்றன.
இந்த காட்சிகள் அனைத்தும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் தொடர்ந்து நடமாடும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)




