» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)
நாகர்கோவில் அருகே குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநர் ஆகியோருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் நேற்று (டிச. 10) செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ்ஸை நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், மினி பஸ் ஓட்டுநரான கொடுப்பைக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெபர்சன் (48) என்பவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த மினி பஸ்ஸை பறிமுதல் செய்தனர். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் ஜெபர்சனுக்கு ரூ. 17,000-ம், இதற்குப் பொறுப்பான நடத்துநருக்கு ரூ. 10,500-ம் என மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)


