» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)
வீட்டில் ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் பணங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா தென்காசி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். இதையொட்டி டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதம் பதுக்கல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் உள்ளன. தென்காசி மாவட்டம் சுரண்டையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் காவலரை தாக்கிய வழக்கில், பங்களா சுரண்டையை சேர்ந்த கோழி அருள் உள்பட 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, கோழி அருள் நான் ராக்கெட் ராஜாவுடன் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ராக்கெட் ராஜாவிடம் விசாரணை நடத்த கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது ராக்கெட் ராஜா வீட்டில் ராக்கெட் லாஞ்சரும், ஏகே-47 ரக துப்பாக்கிகளும் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் கிடந்ததாக போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
இதனால் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக ராக்கெட் ராஜா மீது ஆயுத பதுக்கல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக இந்த வழக்கானது நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தென்காசி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ராக்கெட் ராஜா நேரில் ஆஜர் ஆனார்.
ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதையொட்டி, தென்காசி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 40-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோன்று நீதிமன்றத்திற்குள் வரும் வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)


