» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்

சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

திருநெல்வேலியில் 9-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப்ரவரி 10-ம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலியின் பண்பாட்டு அழகியலையும், வரலாற்று பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, 9-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப்ரவரி 10 ம் தேதியிலிருந்து 22 ம் தேதி வரை திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

திருநெல்வேலியின் நவீன நகரங்கள் முதல் குக்கிராம பஞ்சாயத்துக்கள் வரை அனைத்து தரப்பு மக்களிடமும் புத்தகங்கள் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தோடு புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பிப்ரவரி 12 ம் தேதியிலிருந்து 22 ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட நிர்வாகத்தால் பிப்ரவரி 10-ம் தேதியிலிருந்து நடத்தப்பட உள்ளது. மொத்தம் 13 நாட்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory