» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய வியாபாரி விஷம் குடித்து தற்கொலை!

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:25:59 AM (IST)

கயத்தாறில் இளம்பெண் ஒருவரைச் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டு, விஷம் குடித்த வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா (27). இவரது மனைவி இசக்கியம்மாள் (26) நேற்று முன்தினம் வீட்டில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணியாச்சியைச் சேர்ந்த போலி வியாபாரி மகாராஜன் (50) என்பவர், திடீரென வீட்டிற்குள் புகுந்து இசக்கியம்மாளைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், மகாராஜன் அங்கிருந்து தப்பிச் சென்று தனது வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தார். காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாராஜன் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

மனிதன்Feb 20, 2026 - 08:19:30 AM | Posted IP 104.2*****

தயவு செய்து செய்தி போடும்போது தெளிவாக போடும், என்ன காரணத்திற்காக குத்தினார்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory