» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி விவசாயிகளிடம் கட்டாய இன்சூரன்ஸ் வசூல்: ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் புகார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:18:11 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில், விவசாய நகைக்கடன் வழங்கும் போது காப்பீட்டு பாலிசிகளை கட்டாயப்படுத்தி திணிப்பதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "ஐ.ஓ.பி வங்கியில் நகைக்கடன் பெறச் செல்லும் விவசாயிகளிடம், விபத்து அல்லது இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என வங்கி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். விவசாயிகளின் சேமிப்புக் கணக்கிலிருந்து அவர்களின் அனுமதியின்றி ரூ.800 முதல் ரூ.3,000 வரை காப்பீட்டுத் தொகையாகப் பிடித்தம் செய்யப்படுகிறது.
விவசாய நகைக்கடன் பெறுவதற்கு இத்தகைய இன்சூரன்ஸ் பாலிசிகள் கட்டாயம் என்று மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வங்கி அதிகாரிகள் தங்களது காப்பீட்டு விற்பனை இலக்குகளை எட்டுவதற்காக, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள விவசாயிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவருகிறது.
இன்சூரன்ஸ் பாலிசிகளைத் திணிக்கும் இந்த விதிமீறல் நடைமுறையை வங்கி கிளைகளில் உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள் நடைபெறாத வண்ணம் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். விவசாயிகளின் சேமிப்புக் கணக்குகளை ஆய்வு செய்தாலே இந்த முறையற்ற பணப்பிடித்தம் வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)


Siva SriFeb 19, 2026 - 05:40:29 PM | Posted IP 162.1*****