» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி விவசாயிகளிடம் கட்டாய இன்சூரன்ஸ் வசூல்: ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் புகார்

வியாழன் 19, பிப்ரவரி 2026 5:18:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில், விவசாய நகைக்கடன் வழங்கும் போது காப்பீட்டு பாலிசிகளை கட்டாயப்படுத்தி திணிப்பதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "ஐ.ஓ.பி வங்கியில் நகைக்கடன் பெறச் செல்லும் விவசாயிகளிடம், விபத்து அல்லது இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என வங்கி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். விவசாயிகளின் சேமிப்புக் கணக்கிலிருந்து அவர்களின் அனுமதியின்றி ரூ.800 முதல் ரூ.3,000 வரை காப்பீட்டுத் தொகையாகப் பிடித்தம் செய்யப்படுகிறது.

விவசாய நகைக்கடன் பெறுவதற்கு இத்தகைய இன்சூரன்ஸ் பாலிசிகள் கட்டாயம் என்று மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வங்கி அதிகாரிகள் தங்களது காப்பீட்டு விற்பனை இலக்குகளை எட்டுவதற்காக, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள விவசாயிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவருகிறது. 

இன்சூரன்ஸ் பாலிசிகளைத் திணிக்கும் இந்த விதிமீறல் நடைமுறையை வங்கி கிளைகளில் உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள் நடைபெறாத வண்ணம் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். விவசாயிகளின் சேமிப்புக் கணக்குகளை ஆய்வு செய்தாலே இந்த முறையற்ற பணப்பிடித்தம் வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Siva SriFeb 19, 2026 - 05:40:29 PM | Posted IP 162.1*****

IOB வங்கியின் மாணவ/மாணவிகளுக்கு கல்வி கடன் படித்து வேலைக்கு சென்றதும் அடைக்கலாம்.ஆனால் கொரோனா காலம் படித்து முடித்து வேலை இல்லை.8லட்சத்துக்கு வங்கியில் 2லட்சம் கடன் தந்துள்ளார்.இது வரை வேலை இல்லை.தந்தை இல்லை அவர் 36வயதில் காலஞ்சென்றுவிட்டார்.தாயார் கூலி வேலை பார்த்து வீட்டு வாடகை மருத்துவ செலவு இன்னும் அடுத்து ஒரு பிள்ளை படிக்க வைக்கனும்.கரண்ட், தண்ணீர் பில் உண்ண உணவு உடுக்க உடை எல்லாமே பார்க்கனும்.இந்த நிலையில் வேலை கிடைக்காத நிலையில் வங்கி ஊழியர்கள் வீடு தேடி சென்று லோன் கட்ட வலியுறுத்தி வருகின்றனர்.வீட்டு உரிமையாளர் வீட்டை காலி பண்ண சொல்கிறார்.இந்த அவலை வயதிற்கு வந்த பிள்ளைகளை அவமானம் படுத்தி வருகின்றனர்.இது பெரிய தொரு அவமானம் உணர்ந்தால் குடும்பத்தில் ஏதாவது நடந்தால் IOBமுழு பொறுப்பு எடுக்க வேண்டும்.வேலை கிடைத்தால் அவர்களே கட்டி விடுவார்கள்.இந்த வங்கி மட்டும் தான் இப்படி நடத்தி வருகின்றனர்.இதை கண்காணிக்க வேண்டும்.அப்படி கஷ்டத்தில் 1லட்சம் கட்டியுள்ளார்.மீண்டும் 1லடசத்து 98ஆயிரம் கட்ட வேண்டும் என்கிறார்கள்.வறுமையில் இருப்பதால் படிக்க வேண்டும் கல்வி கடன் வாங்கியுள்ளனர்.இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கள்.நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory