» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு தேவகி நகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக கனிமொழி நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு தேவகி நகர் பகுதியில், பூங்கா அமைப்பதற்கான திட்டமானது, 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுமக்களின் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதற்கான இடத்தை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா, வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அதிநவீன உபகரணங்கள் மற்றும் நடைபயிற்சி தளங்களுடன் இந்த பூங்கா அமையவுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் மக்கள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் இது கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

