» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசைத் தந்ததில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
சனி 21, பிப்ரவரி 2026 5:32:49 PM (IST)

"திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசாங்கத்தைத் தந்ததில்லை என்பது தற்போதைய சூழலில் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக மூத்த தலைவர் சரவண பெருமாளின் 9-வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட பின், அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : அமைச்சர் கே.என். நேரு மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அவர் சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
அல்லது, தமிழக முதல்வர் அவரைத் தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து விடுவித்து, விசாரணை நேர்மையாக நடக்க வழிவகை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பொது வாழ்க்கையில் 'தூய்மை' மற்றும் 'நேர்மை' பேசுவதில் அர்த்தமே இருக்காது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசாங்கத்தைத் தந்ததில்லை என்பது தற்போதைய சூழலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
"செக்யூலரிசம்" என்ற பெயரில் தேசிய அடையாளங்களைச் சிதைக்க முயல்கிறார்கள். ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை, வந்தே மாதரம் போன்ற தேசிய பெருமிதங்களை இழிவுபடுத்தும் சூழல் உருவாகி வருகிறது. இவ்வாறு போனால் தேசிய கீதத்தையே பாட முடியாத நிலை ஏற்படும் என்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்துப் பேசுகையில், "தேசிய அடையாளங்கள் தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என்ற மனநிலையில் அவர் உள்ளார். பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், பாஜக கூட்டணியில் இருந்தபோதும் வைகோ ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? அவர் தற்போது இருக்கும் கூட்டணி சரியில்லை; சேரும் இடம் சரியில்லை என்றால் குணமும் மாறும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்," என்று சாடினார்.
எஸ்சி/எஸ்டி (SC/ST) நிதியில் இருந்து 5,000 ரூபாய் பணம் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மற்றும் அதிமுக சுட்டிக்காட்டியுள்ளன. இதற்குத் தமிழக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. இது குறித்து திருமாவளவன் கேள்வி எழுப்ப வேண்டும், போராட வேண்டும். அந்த நிதி எந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டதோ, அதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் முதிர்ந்த, பண்பட்ட ஒரு தலைவர். தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தவர். அவர் எந்தத் தவறும் செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன். "வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும்?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும்" என்று பொன். ராதாகிருஷ்ணன் உறுதியுடன் பதிலளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

