» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் மீது ஊழல் புகார்: பணிநீக்கம் செய்ய இ.ம.க. கோரிக்கை!

திங்கள் 2, மார்ச் 2026 12:45:27 PM (IST)


தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது பல கோடி ரூபாய் நிதி முறைகேடு புகார்களை முன்வைத்து, அவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் தா. வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி வைகுண்டபதி கோவில் திருப்பணிகளில், ரூ.3.05 கோடி வழங்கப்பட்டும் பணிகள் முடிக்கப்படவில்லை. முறையான திட்டமிடல் இன்றி, உட்பிரகாரப் பணிகள் முடிவதற்கு முன்பே ரூ.80 லட்சம் செலவில் வெளிப்பகுதிகளில் கல் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

கோவில் திருப்பணிக்கான மணல் காணாமல் போனது மற்றும் 110-விதியின் கீழ் லஞ்சம் பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியாளர்களை நியமித்தது போன்ற புகார்கள் எழுந்துள்ளன. ஸ்ரீ சங்கர் ராமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான வணிக நிலத்தை முறைகேடாகக் கையாண்டது தொடர்பாகவும் விசாரணை கோரப்பட்டுள்ளது.

இணை ஆணையரின் இத்தகையச் செயல்பாடுகளால் கோவில் திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

BabuMar 4, 2026 - 01:28:37 PM | Posted IP 172.7*****

Nanum pogum pothu Yellam pakuren building katite than irukanuga kati mudicha mathiri ilai sami panam samike payapadathavan ungaluka payapada poran

vetrivelMar 2, 2026 - 05:51:46 PM | Posted IP 172.7*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory