» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண் கொடூர கொலை: மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில் மகன் வெறிச்செயல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:44:34 AM (IST)
கயத்தாறு அருகே மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில், தாயை அரிவாள்மனையால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியம் (51). இவர்களது மகன் வேலுச்சாமி (32). சுப்பிரமணியன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். வேலுச்சாமி மீது ஏற்கனவே தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் ஓராண்டு சிறையில் இருந்த அவர், சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே, வேலுச்சாமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் ராஜா புதுக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படும் வேலுச்சாமி, வேலைக்குச் செல்லாமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதற்காகத் தனது தாய் பாக்கியத்திடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நேற்று அன்று வீட்டின் முன்னால் நின்றுகொண்டிருந்த பாக்கியத்திடம் வேலுச்சாமி மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார்.
பாக்கியம் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி, வீட்டிலிருந்த அரிவாள்மனையால் தாயை சரமாரியாக வெட்டியுள்ளார். பாக்கியம் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில், அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி அவர் தலையில் போட்டுள்ளார். பாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததைக் கண்ட வேலுச்சாமி அங்கிருந்து தப்பியோடினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பாக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாக்கியம் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த வேலுச்சாமியை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)


தமிழன்Mar 3, 2026 - 01:53:54 PM | Posted IP 172.7*****